கைலாசபுரம் கிராமத்தில் ரூபாய் 7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கத்தினை சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்ராசாபட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட கைலாசபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்,ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.மேலும் கிராம பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து  கிராமத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கு ரூ.10000 நன்கொடை வழங்கினார்.இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.