தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கப்பிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சமுத்திர பாண்டி (60). இவர் அப்பகுதியில் உள்ள 8ம் வகுப்பு படிக்கும் 13வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும் சிறுமி வெளியில் செல்லும் போது சைகை மூலமாக தொடர்ந்து தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து  அச்சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சமுத்திர பாண்டியை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்...