விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரம் கிராமத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்த ராமு ரெட்டியார் இவரது மகன் பூச்சப்ப ரெட்டியார்(87) ,பூச்சப்ப ரெட்டியாருக்கு  கடந்த சில நாட்களாக தீராத வயிறு வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் தனியாக உள்ள அறையில்  பூச்சப்பரெட்டியார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து உடலை கைப்பற்றிய விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார்  உடற்கூர் ஆய்வுக்காக  விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.