தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன் கரிசல் குளம் கிராமத்தை சேர்ந்த சங்கரன் என்பவரின் மகன் ஆறுமுகம் (73) ஆறுமுகம் தனது மகன் அய்யாவு ராஜிடன் கூட்டுக்குடும்பமாக வாசித்து வந்துள்ளார்.ஆறுமுகத்திற்கு கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக தீராத வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆறுமுகம் வீட்டு மாடியின் ஜன்னல் கம்பியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த மாசர்பட்டி காவல் நிலைய போலீசார்  ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி எட்டையாபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.