தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஸ்ரீரங்காபுரம் காட்டுப் பகுதியில் முதியவர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது, இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத ஆய்வுக்காக அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொள்ளதில் உயிரிழந்த முதியவர் கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த காத்தனன் என்பவரின் மகன் தங்கப்பாண்டியன்(70), என்பதும் தங்கபாண்டியன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது, இது குறித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.