விளாத்திகுளம் அருகே A. குமராபுரம் கிராமத்தில் கிணற்றில்  விழுந்து முதியவர் பலி. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள A. குமாரபுரம் கிராமத்தை சேர்ந்த பொன்னையா ரெட்டியார் என்பவரின் மகன் வேலுச்சாமி  (65) வேலுச்சாமி விவசாய பணி செய்து வந்துள்ளார். வேலுச்சாமி விவசாய பணி முடித்துவிட்டு. வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது சேது பெருமாள் என்பவரின் தோட்டத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து விளாத்திகுளம் தீயணைப்புத்துறை வீரர்கள் உதவியுடன் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வேலுச்சாமியின்  உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேலுச்சாமியின் குடும்பத்தில் சில நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வேலுச்சாமி கிணற்றில் அல்லது குடும்ப பிரச்சனையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா. இன்று விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.