தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த தனுஷ்கோடி என்பவரின் மனைவி ஜெகதாம்பாள் (75), ஜெகதாம்பாள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 14-01-2024  ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து காணாமல் போன ஜெகதாம்பாளை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில் 19-01-2024 வெள்ளிக்கிழமை காலை புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு உள்ள கிணற்றில் மூதாட்டி ஜெகதாம்பாள் உயிரிழந்து கிடப்பதாக புதூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து விளாத்திகுளம் தீயணைப்புத்துறை வீரர்கள் கிணற்றில் இருந்த ஜெகதாம்பாளின் உடலை மீட்டனர்.ஜெகதாம்பாள் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம்   என்று புதூர் காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும் இதுகுறித்து புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.