தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நேதாஜி விவேகானந்தா சேவா சங்கம் சார்பில், சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது, இதில் கல்லூரி மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் மரக்கன்றுகள் நடுவதில் முக்கியத்துவம் குறித்தும் மற்றும் பனை விதை நடுவதன் அவசியம் குறித்தும் கருத்தரங்க படம் விளக்கம் நிகழ்த்தப்பட்டது, இந்நிகழ்விற்கு  கல்லூரியின் முதல்வர் பேபி லதா தலைமை வகுத்தார்.(NSS) நாட்டின் நலப்பணித் திட்ட அலுவலர் ராணி வரவேற்புரை ஆற்றினார், இந்நிகழ்வில் கல்லூரியின் பேராசிரியர்கள் மாணவிகள், சேவா சங்கத் தொண்டர்கள்   என ஏராளமான கலந்து கொண்டனர்.