விளாத்திகுளம் பேரூராட்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சியில் தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய ஆணை வழங்கிடுக, ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் ஓட்டுநர்களின் நிரந்தரம் செய்திடுக, 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் அனைத்து கணினி பணியாளர்களையும் பணி நிரந்தரம்  செய்திடுக, உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ஜெயமுருகன் தலைமை தாங்கினார் ஜெய்கணேஷ் முன்னிலை வகித்தார் அரசு ஊழியர் சங்கம் வட்டத் தலைவர் மீனாட்சி சுந்தரம்   சிறப்புரையாற்றினார்.இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.