விளாத்திகுளத்தில் சாலை வரி உயர்வை கண்டித்து  டூரிஸ்ட் கார், வேன்உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அப்துல் கலாம் டூரிஸ்ட் கார், வேன் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் தமிழக அரசு அறிவித்த சுற்றுலா வாகனங்களின் சாலை வரியை அதிகப்படியாக உயர்த்தியதை ரத்து செய்,உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் அப்துல் கலாம் டூரிஸ்ட் கார், வேன் உரிமையாளர் நல சங்கத்தின் செயலாளர் செல்வ முருகன்  தலைமையில் நடைபெற்றது, துணைத் தலைவர் முருகன்,பொருளாளர் அழகர் விக்னேஷ், துணைப் பொருளாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர், மணிகண்டன் வரவேற்பு உரையாற்றினார்,லத்திகா கண்ணன் சிறப்புரையாற்றினார், செய்யது யூசப் நன்றி உரையாற்றினார். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர், நாகலாபுரம், குளத்தூர், சூரங்குடி, பகுதி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.