விளாத்திகுளம் பகுதி பொது மக்களுக்கு நீர்,மோர் வழங்கிய அதிமுக ஒன்றிய செயலாளர் காந்தி (எ)காமாட்சி!  தற்போது நேற்று முதல் அக்கினி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், கொளுத்தும் வெயிலை தணிக்க பல்வேறு அரசியல் கட்சியினர் தமிழக முழுவதும் நீர்,மோர் பந்தல் திறந்து பொது மக்களுக்கு உதவி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிமுக பொது செயலாளர் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு உத்தரவின் பேரில், விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர், மோர், பந்தலில் இன்று ஓட்டப்பிடாரம் முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவரும், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான காந்தி(எ) காமாட்சி பொது மக்களுக்கு மோர், தர்பூசணி, இளநீர் ஆகியவற்றை வழங்கினார், இந்நிகழ்வில்  அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.