தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில், மழைக்காலங்களில் முறையான சாலை வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர், இந்நிலையில் மீனாட்சிபுரம் கிராமத்திற்கு தெருக்களில் முறையான சாலை அமைத்து தர வேண்டும் என்று விளாத்திகுளம் அதிமுக யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தனர், கோரிக்கையை ஏற்று விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை விளாத்திகுளம் அதிமுக யூனியன் சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் செயற்பொறியாளர் செல்வஜோதி, ஜமீன்செங்கல்படை ஊராட்சி மன்ற தலைவர் ரவீந்திரன், மீனாட்சிபுரம் அதிமுக நிர்வாகிகள் பாண்டி, கந்தன், மரகதவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை அதிமுக யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வேடப்பட்டி to நெடுங்குளம் வரை சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
அடுத்த
கல்லூரி மாணவர்கள் சார்பில் மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026