தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம்  கிழக்கு கடற்கரை சாலை வழியாக இலங்கைக்கு பீடி இலைகள் கடத்த இருப்பதாக கியூப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது,இதனை அடுத்து Q பிரிவு ஆய்வாளர் விஜய் அனிதா, உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், தலைமைக் காவலர்கள் ராமர், இருதய ராஜ்குமார் பழனி பாலமுருகன் குழு அடங்கிய Q பிரிவு போலீசார் கலைஞானபுரம் TO குளத்தூர் கிழக்கு கடற்கரை  சாலையில் சோதனையில் ஈடுபட்டனர்,அப்போது  சந்தேகத்திற்கிடமான முறையில் அவ்வழியாக வந்த டாட்டா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அந்த வாகனத்தில் 40 மூடைகளில் சுமார் 1500 கிலோ  எடையுள்ள பீடி இலைகள் இருந்தது தெரிய வந்தது,இதனை அடுத்து பீடிகளை கடத்தி வந்த பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த லூர்து அந்தோணி (41)மற்றும் வல்லநாடு பகுதியை சேர்ந்த மாரியப்பன்(37),திருநெல்வேலி சாந்தி நகர்பகுதியில் சேர்ந்த முத்துக்குமார்(32)திருநெல்வேலி கான்சாபுரம் பகுதியை சேர்ந்த சிவபெருமாள்(38) ,திருநெல்வேலி நொச்சிக்குளம்  பகுதியை சேர்ந்த செந்தூர் (20) வல்லநாடு பகுதியை சேர்ந்த சரவணன் (23)ஆகிய ஆறு பேரையும் க்யூப் பிரிவு போலீசார் கைது,அவர்களிடமிருந்த 1500 கிலோ பீடி இலைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 இருசக்கர வாகனம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாட்டா ஏஸ் வாகனத்தையும் பறிமுதல்  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.