விளாத்திகுளம் அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலி. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல ஈரால் தெற்கு தெருவை சேர்ந்த வீரய்யா மகன் முருகன் வயது (60) இவர் கோவில்பட்டியில் கூலி வேலை செய்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில்கீழ ஈரால் வழியாக மேல ஈராலுக்கு வந்து கொண்டிருந்தார்.அவருக்குப் பின்னால் விளாத்திகுளம் விளாத்திகுளம் அருகே உள்ள குமாரசித்தன்பட்டியை சேர்ந்த சரவணகுமார் மகன் ஈஸ்வர் பிரகாஷ் வயது (26) என்பவர் முன்னாள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதிவிபத்துகுள்ளானது. இந்த விபத்தில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த கார் மீது கொண்டிருந்த இருசக்கர வாகனம் மோதி அதற்கு முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது இந்த விபத்தில் முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்தவுடன் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் காரை ஓட்டி வந்த ஈஸ்வர் பிரகாசுக்கு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது மேலும் இது குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Vilathikulam
சாலை விபத்தில் தொழிலாளி பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் பகுதியில் வருகின்ற 28-ம் தேதி கனிமொழி எம்.பி.-யின் மக்கள் களம் நிகழ்ச்சி!
அடுத்த
கிணற்றில் விழுந்து முதியவர் பலி.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026