விளாத்திகுளம் அருகே  விவசாய பணிக்கு சென்ற பெண் மின்னல் தாக்கி உயிரிழப்பு.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே. துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் மனைவி அமுத மலர்(35),அமுத மலர் விவசாய பணிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பி கொண்டிருந்த போது லேசான மழை பெய்து கொண்டிருந்தது, அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மின்னல் தாக்கியதில், அமுத மலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தகவல் அறிந்த காடல்குடி காவல் நிலைய போலீசார். அமுத மலரின் உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.