விளாத்திகுளம் அருகே சேலை சக்கரத்தில் சிக்கியதால் பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ கல்லூரணி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மனைவி சித்தம்மாள் (70), இவர் விவசாய பணிக்காக ரெட்டியபட்டி கிராமத்திற்கு   சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பியபோது தனது உறவினறான சித்தையா என்பவரின்  பைக்கில் பின்னார் அமர்ந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது  அவரது சேலை, பைக்கின் பின் சக்கரத்தில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சித்தமாளை முதலுதவி சிகிச்சைக்காக நாகலாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர், பின்னர் மேல் சிகிச்சைக்காக  விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு   கொண்டு செல்லும் வழியில் சித்தம்மாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சங்கலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.