தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கரிசல்குளம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் விளாத்திகுளம் பகுதி மற்றும் தமிழகத்தில் உள்ள மானாவரி சாகுபடியில் மகத்தான வருமானம் என்ற தலைப்பில், இயற்கை விவசாயம் சார்ந்த பயிற்சி நடைபெற்றதுஇந்த பயிற்சியில் ஈரோடு, தருமபுரி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் இந்த மண் காப்போம் இயற்கை விவசாயம் சார்ந்த பயிற்சியில் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் விவசாயிகள் கூட்டமைப்பு பல்வேறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்தவர்களும் பங்கு பெற்றனர், இந்தப் பயிற்சி மாணவரி சாகுபடியில் இயற்கை விவசாயம் துவங்கவும் மிகவும் பயனுள்ளதாக பயிற்சியானது வழங்கப்பட்டது. இந்த பயிற்சிக்கு சிறப்பு அழைப்பாளராக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு விளாத்திகுளம் தொகுதியில் மானாவாரி விவசாயத்திற்கு இயற்கை உரம் பயன்படுத்துதல் குறித்து கலந்து கொண்டவர்களுக்கு எடுத்துக் கூறினார். மேலும் இதுபோன்ற பயிற்சியானது அடுத்த மாதங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் என திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சுவாமி ஸ்ரீ முக தெரிவித்தார். இந்நிகழ்வில் பயிற்சியாளர்கள் கருப்பசாமி, பிரபாகரன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.