விளாத்திகுளம் அருகே வாலிபர் தூக்கிட்டுதற்கொலை?   தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே. சுந்தரேஸ்வரபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த உத்தண்டராமன் மகன் பார்த்திபன் வயது (30) இவர் கடந்த  தைப்பொங்கலையொட்டி மோட்டார் சைக்கிள் இருந்து கீழே விழுந்தார் அதில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அதிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது இதனை அடுத்து நேற்று மாலை6.30மணி அளவில் வீட்டில் தனியாக இருந்த பார்த்திபன்  மின்விசிறியில் நைலான் கயிற்றால் தூக்கு மாட்டி தற்கொலை  செய்து கொண்டுள்ளார், இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த  விளாத்திகுளம் போலீசார் பார்த்திபன்  உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.