விளாத்திகுளம் அருகே பறையடித்து வாக்காளர் சிறப்பு முகாம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து புதூர் பேரூராட்சி வளாகம் வரை சிறப்பு சுருக்கம் முறை திருத்தம் 25. 11. 2023 மற்றும் 26. 11. 2023 ஆகிய தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியல் சேர்ப்பதற்கு உண்டான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றை கோஷங்களாக எழுப்பியும், பறையடித்தும் தேர்தல் விழிப்புணர்வு பேரணியாக நடை பயணம் மேற்கொண்டனர்.இந்த வாக்காளர் சிறப்பு முகாம் விழிப்புணர்வு பேரணியை விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன் ஆகியோர் கொடி அசைத்து தலைமை வகித்து தொடங்கி வைத்தனர். இந்த பேரணியானது புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி பேருந்து நிலையம் வழியாக, புதூர் பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியை அன்னைஷீபாபிளவர் லெட், வருவாய் ஆய்வாளர் அனிதா, கிராம நிர்வாக அலுவலர் யுவராம், மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
Vilathikulam
பறையடித்து வாக்காளர் சிறப்பு முகாம் விழிப்புணர்வு பேரணி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கிராம உதவியாளர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
அடுத்த
அதிக விலைக்கு உரம் விற்பனை... கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்?
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026