தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது பெய்த தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, உணவு இருப்பிடம் இன்றி வெகுவாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் சமூக ஆர்வலர்கள்,தொண்டு நிறுவனங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் பணம் வழங்கி உதவி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வாதலக்கரை கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் விஜய் பிரபாகரன் என்ற ஆறாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தனது சேமிப்பு கணக்கில் இருந்து பத்தாயிரம் ரூபாயை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனிடம் வழங்கினார்.
Vilathikulam
வெள்ள நிவாரண உதவி வழங்கிய பள்ளி மாணவன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
உதவிக்கரம் நீட்டிய ஓபிஎஸ் அணியினர்!
அடுத்த
நிவாரண பொருட்கள் வழங்கிய முன்னாள் MLA சின்னப்பன்!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026