தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது எட்டையாபுரம் பஜார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது,விளாத்திகுளம் அருகே உள்ள எப்போதும்என்றான் கிராமத்தை சேர்ந்த  செல்வராஜ் என்பவரின் மணி என்ற மாடசாமி (43) என்பவர்,எட்டயபுரம் பஜார் நடத்தி வரும்  தனது கூல்டிரிங்ஸ் கடையில்  சட்டவிரோதமாக  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட் விற்பனைக்காக பதிக்க வைத்திருந்தது தெரியவந்தது,இதனை அடுத்து மணி என்ற மாடசாமியை கைது செய்த எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் அவரிடம் இருந்த 33  புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர் இது குறித்து எட்டயபுரம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.