விளாத்திகுளம் அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது - 134 கிலோ புகையிலை பறிமுதல். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது மேலக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் மாரிராஜ்(40) என்பவர் மேலக்கரந்தை கிராமத்தில் நடத்தி வரும் பல சரக்கு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது, இதனை அடுத்து மாரி ராஜை கைது செய்த மாசார்பட்டி காவல் நிலைய போலீசார், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 1 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 134  கிலோ  புகையிலை பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் ரூபாய் 32 ஆயிரத்தை பறிமுதல் செய்து, மாரி ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.