தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கைலாசபுரம் கிராமத்தில் சாலையை கடக்கும் முயன்ற  ஒரு வயது பெண் புள்ளிமான் வாகன மோதி பரிதாபமாக உயிரிழந்து கிடப்பதாக கைலாசபுரம் பகுதி மக்கள், விளாத்திகுளம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்,இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் வனத்துறையினர், உயிரிழந்த மானின் உடலை கைப்பற்றி பிரேத ஆய்வு செய்து வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.