விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்  தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. தற்போது வட கிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பில் பள்ளி கல்லூரி மற்றும் பொதுமக்களுக்கு தீயணைப்பு துறை சார்பில்  பருவ மழை பேரிடர்களிருந்து தங்களை பாதுகாத்து கொள்வது மற்றும் தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது, இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்  பள்ளி மாணவ மாணவிகளுக்கு, விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் மீட்புபணி வீரர்கள் வடகிழக்கு பருவ காலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீர்த்தடுப்பு போலி ஒத்திகை பயிற்சிகளை தத்ரூபமாக  செய்து காண்பித்தனர்.