விளாத்திகுளம் அருகே எட்டயபுரம் அரசு
மருத்துவமனையில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி
மாவட்டம் கோவில்பட்டி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் டாக்டர்.ஜெகவீரபாண்டியன் என்ற
குணசேகரன் உத்தரவின்படி கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு அரசு மருத்துவமனை
தலைமை மருத்துவர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.மருத்துவ அலுவலர் அஜய் முன்னிலை
வகித்தார்.இந்தமுகாமில் தொழுநோய் எப்படி பரவுகிறது,தொழுநோய் பற்றிய ஆரம்ப அறிகுறிகள் மற்றும்
தொழுநோய் சிகிச்சைகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டது.மேலும் அதை தடுக்கக்கூடிய வழிமுறைகளையும்
எடுத்துக் கூறி துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து
கொண்டனர்.
Vilathikulam
தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவம் பொன்னூஞ்சல் தாலாட்டு!
அடுத்த
மழைநீருடன் கழிவுநீர் குடியிருப்பு பகுதியை சூழ்ந்ததுகால்நடைகள் உயிரிழந்து துர்நாற்றம்!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026