விளாத்திகுளம் அருகே மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவாலார்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பொன் மாடசாமி திருக்கோவில் 53 ஆம் ஆண்டு கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மாட்டு வண்டி ஜோடிகள் கலந்து கொண்டன. இரு பிரிவுகளாக நடைபெற்ற எல்கை பந்தயத்தில் பூஞ்சிட்டு போட்டியில் 18 ஜோடிகளும், தேன்சிட்டு போட்டியில் 11 ஜோடிகளும் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தனபோட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.