தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனரா வங்கியின் புதிய கிளை துவங்கப்பட்டது. விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு  விரைவான சேவையை செய்து வருகின்றது. அதனடிப்படையில் கே.சி.சி.எஸ் கடன் உதவி வழங்கும் முகாம்  நடைபெற்றது, கனரா வங்கியின் விளாத்திகுளம் கிளை, மேலாளர் மாரிச்செல்வி  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமை தாங்கினார், விடியல் டிரஸ்ட் உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்., நிறுவனத்தைச் சார்ந்த சுமார் 16 உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு ரூபாய் 50 இலட்சம் கடனாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் விடியல் டிரஸ்ட் உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்., ன் நிர்வாக இயக்குநர் ஜோதிமணி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார், முதன்மைச் செயல் அலுவலர் செந்தில்குமார், வரவேற்புரையாற்றினார். விழாவின் முடிவில் நகை மதிப்பீட்டாளர் மற்றும் நிர்வாக அலுவலர் பாலமுருகன், நன்றியுரை கூறினார். அலுவலகப் பணியாளர் சந்திராநிகழ்ச்சிகான முன்னேற்பாடுகளை செய்திருந்தார்.