தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் வன்னியன் என்பவரின் மகன் வெள்ளைச்சாமி (47) வெள்ளைச்சாமி கார் ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார், வெள்ளைச்சாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது,இந்நிலையில் வழக்கம் போல்  குடித்துவிட்டு வீட்டுக்கு சென்று  தகராறு செய்துள்ளார், வெள்ளைச்சாமியின் மனைவி சினியம்மாள் கண்டித்ததால் மன வருத்தத்தில் இருந்த வெள்ளைச்சாமி ஊரின் கம்மாய் கரையில் அரளி விதையை அரைத்து சாப்பிட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார்.இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர், ஆனால் செல்லும் வழியில் வெள்ளைச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.