தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தில் 2 வயதுடைய பெண் புள்ளிமான் சாலையை கடக்கும் முயன்ற போது, வாகனம் மோதி காயம் அடைந்தது, இதனை அடுத்து மார்த்தாண்டம்பட்டி கிராம மக்கள் விளாத்திகுளம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து மானை மீட்ட விளாத்திகுளம் வனத்துறையினர், படுகாயம் அடைந்த மானை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர், ஆனால் மான் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தது.இதனை உயிரிழந்த மானை உடற்கூர் ஆய்வு செய்த பின் பாதுகாப்பாக  வனப்பகுதியில் மானின் உடலை வனத்துறையினர் புதைத்தனர்.