இந்தியா முழுவதும் இன்று 77, வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டடு வருகிறது இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 77, வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் தேசிய கொடி ஏற்றி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.இதனை தொடர்ந்து பேரூராட்சி அலுவலகம் ,மற்றும் விளாத்திகுளம் கிளை நூலகம் , செங்கோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் தேசிய கொடி ஏற்றப்பட்டது . இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி , செங்கோட்டை அரசுமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயமீனா ,நூலகர் ஜெயந்தி , நூலக பணியாளர் ராஜலட்சுமி , பேரூராட்சி தலைவர் சூர்யா அய்யன் ராஜ் , விளாத்திகுளம் திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பு ராஜன் , சின்னமாரி முத்து , வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் , வார்டு கவுன்சிலர்கள் குறிஞ்சி , பிரியா , விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர்,வாசகர்கள் பிரபு,சந்திரசேகர், சேகர்,ஜான்சிராணி,எ உட்பட பலர் கலந்து கொண்டனர்.