தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த தங்க மாரியப்பன் என்பவரின் மகன் சதீஷ்(20) என்ற இளைஞர், அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்துஇளைஞர்களை கஞ்சா போதைக்கு அடிமையாக்கி வைத்திருப்பதாக தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து தாளமுத்துநகர் காவல் காவல் நிலைய போலீசார் சதீஷை கைது செய்ய தாளமுத்துநகர் பகுதி முழுவதும் தேடியுள்ளனர், சதீஷ் தப்பி ஓடியதை அறிந்த தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அளித்தனர். இதனை அடுத்து குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜகுமாரி மற்றும் உதவி ஆய்வாளர் முத்துராஜா குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் to ஸ்ரீ வைகுண்டபுரம் சாலையில் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை நிறுத்தி விசாரணை செய்தபோது. அதில் 3 பேரில் ஒருவர் தாளமுத்துநகர் பகுதியில் இருந்து தப்பி ஓடிய சதீஷ் என்பவரும், மற்ற இரண்டு பேரும் சதீஷின் கூட்டாளிகளான அதே பகுதியை சேர்ந்த லோகிதாசன் மகன்  சக்தி இசக்கி (19), மற்றும் பாலசுப்பிரமணியன் மகன் சுடலை விக்னேஷ்  (24) என தெரிய வந்தது, இதனை அடுத்து 3 பேரையும் கைது செய்த குளத்தூர் காவல் நிலைய போலீசார் அவர்களிடம் இருந்த 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.