தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக   பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்க்கை  வெகுவாக பாதிக்கப்பட்டு, உணவு இருப்பிடம் இன்றி தவித்தவந்த மக்களை அரசு சார்பில் மீட்டு அரசு பள்ளி கட்டிடங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் தங்க வைத்து,  அரசு மற்றும் சமூக அமைப்பினர் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் கனமழையில்  பாதிக்கப்பட்ட சுப்பிரமணியபுரம், சத்யா நகர், எம்ஜிஆர் நகர்,  ராஜீவ் நகர், கேசவன் நகர் என தங்க வைக்கப்பட்டுள்ள 150 க்கும்  மேற்பட்ட பொது மக்கள் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் தற்போது மூட வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்  தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு திமுக மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் 150 நபர்களுக்கு  போர்வை மற்றும் காலை உணவு வழங்கினார்.