கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து பார்சல் சர்வீஸ் கொரியர் வேன் மூலமாக கோவில்பட்டிக்கு, தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்த இருப்பதாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த கொரியர் வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் இரண்டு மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது, இதனை அடுத்து பார்சல் யாருக்கு வந்தது என்று விசாரித்த போது, விசாரணையில் கோவில்பட்டி கணேஷ் நகர் ஜேசுதாஸ் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரும் பெங்களூரில் இருந்து கொரியர் பார்சல் சர்வீஸ் மூலமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது, இதனை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், வேனில் கடத்திவரப்பட்ட 130 கிலோ புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.