தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி -சங்கரலிங்கபுரம் பகுதியில் சேர்ந்த அருண்குமார் என்பவர்  பத்திரகாளியம்மன் மேட்ச் வொர்க் என்கின்ற தீப்பெட்டி தொழிற்சாலை நடத்திவருகிறார். இந்நிலையில் மின்னழுத்தம் காரணமாக தொழிற்சாலை முழுவதும் தீ பற்றி எரிந்துள்ளது, இந்த விபத்தில் 10 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பொருட்கள் தீயில் கருகி நாசமானது. இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி தீயணைப்புத்துறை நிலை அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள், தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.