கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம் பட்டியில் அமைந்துள்ள செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவநாத ஸ்வாமி திருக்கோவிலுக்குட்பட்ட கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோவிலில், அப்பகுதியில் உள்ள ஆறு சமுதாய மக்கள் வெகு விமர்சனையாக திருவிழாவை நடத்துவது வழக்கம்,  இந்நிலையில் திருவிழாவை நடத்த கோவில் நிர்வாகம் அழைப்பு விடுக்காததை கண்டித்து, லிங்கம்பட்டி பொதுமக்கள் கோவில்பட்டி- கடலையூர்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.