விளாத்திகுளம் அருகே குளத்தூர்- ராமேஸ்வரம் சாலையில் புகையிலைப் பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்தியவர் கைது.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது குளத்தூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது இருசக்கர வாகனத்தில் ரூபாய் 16 ஆயிரம் மதிப்புள்ள 1860 புகையிலை பாக்கெட் இருப்பது தெரிய வந்தது, இதனை அடுத்து கடத்தலில் ஈடுபட்ட சூரங்குடி நடுத்தெருவை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சுந்தரபாண்டி வயது (46), என்பவரை குளத்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த புகையிலை பாக்கெட்டுகள், ரூபாய் 9000 ரொக்க பணம்   மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து சுந்தரபாண்டியனை சிறையில் அடைத்தனர்.